இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பெண் கொலை..!!
Read Time:1 Minute, 12 Second
‘டெனிம்’ காற்சட்டை அணிந்த காரணத்தினால் பெண்ணொருவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று முதுகல , உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரும்புக் கம்பியால் தாக்கியதாலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
நிரோஷினி குமாரி முனசிங்க என்ற, 2 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கணவன் மனைவியிடையே தினசரி மோதல் இடம்பெற்று வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தின் போது கணவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர்களின் ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating