வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை..!!
Read Time:1 Minute, 3 Second
வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு 6 பவுண் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இன்று காலை காத்ததன்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் காங்கேயனோடை வாசிகசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் முஹம்மது இப்றாஹீம் சம்சுதீன் என்ற குடும்ப தலைவரை குத்திவிட்டு நகையை அபகரித்துச் சென்றுள்ளனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மற்றும் தடயங்களை கண்டறியும் விஸேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating