தொழிற்சாலை இடிந்து 19 பேர் பலி: பாகிஸ்தான் போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல்…!!
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கடைகளுக்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது.
2 மாடி கட்டிடம் கொண்ட அந்த தொழிற்சாலையில் 3–வதாக புதிய மாடி கட்டப்பட்டு வந்தது. அதன் பாரம் தாங்காமல் கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் 200–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கிறார்கள்.
அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். 2 நாட்கள் கடந்தும் இன்னும மீட்பு பணி முடியவில்லை. இடிபாடுகளுக்குள் இருப்பவர்கள் உயிரிருடன் இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் போலீசாரையும் தீயணைப்பு படையினரையும் தாக்கினார்கள். எனவே லாகூரில் பதட்டம் நிலவுகிறது. பொதுமக்கள் ஆத்திரமடைந்திருப்பதால் மீட்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating