5 வயது பேத்தியிடம் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்து, பாலைவனத்தில் தனியாக தவிக்க விட்டுவந்த தாத்தா…!!

Read Time:1 Minute, 47 Second

159f655f-33fd-40a6-adbd-542224e3f002_S_secvpfஅமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில், தனது ஐந்து வயது பேத்தியிடம் குண்டுகளுடன் துப்பாக்கியைக் கொடுத்து, அவளை தனியாக தவிக்க விட்டுவந்த ஐம்பத்து மூன்று வயது தாத்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பேத்தியுடன் பாலைவனத்தின் அருகே சென்றபோது அவரது சரக்கு வண்டியில் கோளாறு ஏற்பட்டு நின்றுபோனது. இதையடுத்து நிழலில் தூங்கு, உதவி கிடைக்கின்றதா? பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். அத்துடன் தனது ’.45 காலிபர்’ துப்பாக்கியை பேத்தியின் கையில் கொடுத்து ‘கெட்டவர்கள் வந்தால் சுடு’ என்றும் கூறியுள்ளார்.

அவ்வழியே வந்த ஒரு தீயணைப்பு வீரர், கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்து அதிர்ச்சிடைந்தார். அவளது நிலையைப் பற்றி தெரிந்துகொண்டதும், உதவிதேடி சென்ற அவளது தாத்தாவை தேடிப்பார்த்தார். அருகாமையிலிருந்த ஊரின் பாரில் தாத்தா மது குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் கையில் ஆபத்தான ஆயுதத்தைக் கொடுத்ததற்காகவும், அவளை தனியே தவிக்கவிட்டதற்காகவும் சிறுமியின் தாத்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலிபோர்னியாவில் வாலிபர் மூளைக்குள் புழு: ஆபரேஷன் செய்து அகற்றினர்..!!
Next post புரசைவாக்கத்தில் மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியை மீது புகார்…!!