தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை..!!
Read Time:1 Minute, 6 Second
தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் தலகிரியாகம பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஏ. செல்வாராஜு என்ற விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
டிபர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு சிறிய குடிசையில் வசிக்ககூடிய ஒருவர் என்பதுடன், அவருடைய சடலத்தை வைப்பதற்கு கூட அந்தக் குடிசையில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating