சொக்லேட் என நினைத்து பட்டாசை உண்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!
மஹாராஸ்டிராவில் சொக்லேட் என நினைத்து பட்டாசை உண்ட 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தில் மைதானப் பகுதியில் நேற்று மதியம் சிறுவர்– சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தாமினி என்ற 5 வயது சிறுமி வெடிக்காமல் வீசப்பட்டு கிடந்த பட்டாசுகளை சொக்லேட் என நினைத்து 3 பட்டாசுகளை தின்று விட்டாள்.
இதையடுத்து அந்த சிறுமி, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தை அடுத்து, உடனடியாக அவளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர், இதுபற்றி தகவல் அறிந்த அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், கேட் நகர பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating