ஆந்திராவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹீரோவின் பாதுகாவலர் கைது..!!
Read Time:1 Minute, 16 Second
ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ ஒருவருக்கு பாதுகாவலராக இருப்பவர் மேடக்கை சேர்ந்த நாகேந்தர் (வயது 23). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்தான் இந்த வேலையில் இவர் நியமிக்கப்பட்டார்.
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்துவரும் நாகேந்தர், கடந்த வியாழக்கிழமை தனது அறையின் முன் விளையாடி கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி அறைக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, நாகேந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating