ஜேர்மனியில் 8 பச்சிளம் குழந்தைகளை கொன்றது தாயாரா? பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

Read Time:2 Minute, 34 Second

5child_002ஜேர்மனி நாட்டில் 8 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயார் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பவேரியா மாகாணத்தில் உள்ள Wallenfels என்ற சிறிய நகரில் 45 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாயார் தங்கியிருந்த வீட்டில் இறந்த நிலையில் குழந்தை ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலை பெற்று குடியிருப்பு பகுதிக்கு வந்த பொலிசார், 8 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தைகளின் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், சந்தேகத்திற்குரிய தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

தாயாரின் துணைவரான 55 வயதான நபரிடம் விசாரணை செய்ததில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்பதால் பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.

ஆனால், தாயாரிடம் விசாரணை செய்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்ட 8 குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள் தன்னுடைய சொந்த குழந்தைகள் என்றும், அவற்றை நான் தான் கொன்றதாக பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், எதற்காக கொலை செய்தார், மற்ற குழந்தைகளை கொன்றது யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

பொலிசார் மூலம் இன்று கிடைத்துள்ள தகவலை தொடர்ந்து, பிரேத பரிசோதனையில் உள்ள குழந்தைகளின் மரணம் தொடர்பான அறிக்கை வெளியான பின்னரே முழு தகவல்களும் வெளியாகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையான பெற்றோர்கள் கண்டுபிடிப்பு: நண்பர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..!!
Next post பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!