ஆரணி அருகே 3½ அடி உயர பெண்ணை காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர்..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் ரெயில் நிலைய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 19). 3½ அடி உயர பெண்ணான இவர், 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் செல்வம் (21) கார் டிரைவர்.
ராஜலட்சுமியும், செல்வமும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வம், ராஜலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு ராஜலட்சுமியை பார்ப்பதையே அவர் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜலட்சுமி, செல்வத்தை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அங்குள்ள கைலாசநாதர் கோவிலில் ராஜலட்சுமிக்கும், செல்வத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களை உறவினர்கள் வாழ்த்தினர்.
Average Rating