பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கான்: வெளியான தகவல்கள்..!!
சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கானுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை பிறப்பிடமாக கொண்ட முகம்மது இம்வாசி என்ற ஜிகாதி கான், அமெரிக்க பத்திரிகையாளர்கள், பிரித்தானிய தொண்டு நிறுவன ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளான்.
இவன் கொலை செய்யும் காட்சிகள் வீடியோக்களில் வெளியாகி உலக மக்கள் மத்தியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில், கடந்த வாரம், சிரியாவில் ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள ரக்கா பகுதியில் அமெரிக்காவின் அதிநவீன ‘ரீப்பர்’ வகை ஆளில்லா விமானம் மூலம், ‘ஹெல்பயர்’ ஏவுகணை வீச்சில், ஜிஹாதி ஜான் கொல்லப்பட்டான்.
இந்நிலையில், ஒரு பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஜிகாதி கானுக்கு ஆண் குழந்தை ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அப்பெண் எந்தநாட்டை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரித்தானியா நாட்டு சட்டப்படி, அந்நாட்டு குடிமகன், வேறு நாட்டில் வாழ்ந்தாலும், அவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் பிரித்தானிய குடியுரிமையை வழங்கப்படும், எனவே, ஜானின் குழந்தை பிரித்தானிய குடியுரிமை பெற்ற குழந்தையாகக் கருதப்படுவதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Average Rating