ஐதராபாத் பள்ளியில் லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி 4 வயது சிறுமி பலி..!!
Read Time:1 Minute, 11 Second
ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்துவந்த 4 வயது சிறுமி இன்று லிப்ட் கதவுக்குள் தலை சிக்கிய விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தின் தில்குஷ் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்துவந்த சயீதா பாத்திமா என்ற அந்த சிறுமியின் தலை இன்று லிப்டுக்குள் சிக்கியதாகவும், அவளை மீட்கும் முயற்சிகள் பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் மாலக்பேட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பலியான சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் இதர மாணவ-மாணவியரின் பெற்றோரும் இன்று அந்தப் பள்ளியின் அருகே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating