கங்கையில் குப்பை கொட்டிய 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது..!!
Read Time:39 Second
பேலியகொட – நெல்லிகஹவத்தை பகுதியில் களனி கங்கையில் குப்பை கொட்டியதாக கூறப்படும் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை புதுக்கடை மற்றும் வத்தளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating