காரணங்களின்றி மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கிய அதிபர். ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!

Read Time:3 Minute, 30 Second

HUMAN-RIGHTS-COMMISSON-OF-SRILANKA.அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல உயர்தர பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் தனது மகளை எந்த வித காரணங்களுமின்றி அதிபர் விலக்கியுள்ளதாக அவரின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார்.

அட்டன் கல்வி வலய பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது மகளை பின் தொடர்ந்து இடையூறு செய்து வந்தததால் இது குறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததோடு கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனிடையே குறித்த ஆசிரியர் தனது மகள் வகுப்பு மாணவன் ஒருவர் மூலமே மகளுக்கு இடையூறுகள் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெற்றோர்களிடம் மாணவனுக்கு எதிராக கடிதம் ஒன்றை பெற்றுக்கொண்ட அதிபர் அம்மாணவனை பாடசாலையிலிருந்து விலக்கியுள்ளார்.

அதே வேளை மாணவன் விலக்கப்பட உங்கள் மகள் தான் காரணம் எனக்கூறியுள்ள அதிபர் குறித்த மாணவியை பாடசாலைக்குள் சேர்க்க முடியாது என தந்தைக்கு கூறியுள்ளார். காரணங்களின்றி எனது மகளை ஏன் அனுமதிக்கமுடியாது என்று தந்தை கேள்வி எழுப்பியதற்கு இந்த கல்லூரிக்கென்று பிரத்தியேக சட்டம் உள்ளது அதை நானே தீர்மானிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து மாகாண பணிப்பாளரிடம் சென்று தந்தை சம்பவத்தை கூறியதையடுத்து அவர் இந்த மாணவியை உடனடியாக வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அதிபருக்கு கடிதம் தந்துள்ளார். எனினும் மாகாண பணிப்பாளரின் கடிதத்தை அலட்சியம் செய்த அதிபர் ஒருதலைபட்சமான கடிதங்களுக்கு எல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை எனத்தெரிவித்ததோடு இது குறித்து விசாரணை செய்யும் படி நானும் மாகாண பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் பதிலை பொறுத்தே முடிவு செய்ய முடியும் என்றும் பதில் கூறியுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தையும் தாயும் ஆசிரியர்கள். அரசாங்க உத்தியோகத்தர்களான எமக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெற்றோர்கள் எப்படி எல்லாம் பழிவாங்கப்படுகிறார்கள் என்பது தெரிகிறது எனத்தெரிவித்துள்ள ஆசிரியரான தந்தை, 2016 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனது மகள் மனஉளைச்சளுக்குள்ளாகியிருப்பதாகவும் காரணங்களின்றி தனது மகளின் கல்வி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இம் மாதம் இலங்கை வரும் சமந்தா…!!
Next post மொனராகலையில் பெண் ஒருவர் படுகொலை…!!