போரால் உறவுகளை இழந்த குழந்தைகளின் நிம்மதியற்ற தூக்கம்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்…!!
போர்கள் பெரியவர்களுக்கு இடையே நடக்கின்றன என்றாலும், அதில் பாதிக்கப்படுவது இந்த பெரியவர்களைச் சார்ந்த குழந்தைகளும்தான். ஐந்து ஆண்டுகளாக நடந்துவரும் சிரியாவின் போரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு எத்தனையோ குடும்பங்கள் பலியாகிவிட்டன. மேலும், பல சிதறிவிட்டன.
மிஞ்சியுள்ள குடும்பங்கள் சொந்த வீட்டைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒரே ஆசையில், ஐரோப்பாவை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் சிறுவர், சிறுமியர் தமது குழந்தைத் தன்மையையே இழந்துபோய், சீக்கிரமாகவே பெரியவர்கள் ஆகின்றனர்.
போர்சூழலால் நாட்டை விட்டு ஓடிவந்த குடும்பங்களின் சிறுவர், சிறுமியரின் தூங்கும் காட்சிகளை மேக்னஸ் வென்மேன் என்ற புகைப்படக்கலைஞர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பார்வையிட்டு படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.
நிம்மதியான தூக்கத்திற்கு கூட வழியில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த குழந்தைகள் தூங்கும் படங்களில் சிலவற்றை காணலாம்.
Average Rating