கோவையில் நகைபறிப்பு முயற்சியில் பெண் கொடூர கொலை..!!

Read Time:2 Minute, 55 Second

a3690db2-153a-4137-88d5-58dcdd21780e_S_secvpfகோவை காந்திபார்க் சுக்கரவார் பேட்டையை சேர்ந்த ஜோகப்பன். இவரது மனைவி மீனாட்சி (வயது 37). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். ராகுல் அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று ராகுலுக்கு உடல்நலம் சரியல்லாமல் போனது. மகனுக்கு சிகிச்சை அளிக்க நேற்று மாலை வீரகேரளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மீனாட்சி மொபட்டில் அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.

வீரகேரளம்– பனைமரத்தூர் கிருஷ்ணன்பதி குளம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். திடீரென மீனாட்சி ஓட்டிவந்த மொபட் மீது அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை மோத விட்டனர்.

இதில் மீனாட்சியும், ராகுலும் கீழே விழுந்தனர். இதில் மீனாட்சிக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அப்போது அந்த வாலிபர்கள் மீனாட்சி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த மீனாட்சியும், ராகுலும் சத்தம்போட்டனர்.

அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

பொதுமக்கள் மீனாட்சியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். இது குறித்து செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மீனாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். எனவே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பாலியல் புகார்: 5 தனிப்படையினர் சிவகங்கையில் விசாரணை…!!
Next post வங்காளதேசத்தில் போர்க்குற்ற வழக்குகளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூக்கு: சுப்ரீம் கோர்ட்டு..!!