மலேசிய தொழில் அதிபர் தலை துண்டிப்பு: பிலிப்பைன்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..!!

Read Time:1 Minute, 56 Second

timthumbபிலிப்பைன்ஸ் நாட்டில், போர்னியோ தீவில் உள்ள சீன உணவு விடுதி ஒன்றில் வைத்து, மலேசியாவை சேர்ந்த பெர்னார்டு தென் என்ற தொழில் அதிபரையும், ஒரு மலேசிய பெண்ணையும் அல்கொய்தா ஆதரவு பெற்ற அபு சய்யாப் தீவிரவாதிகள் கடத்தினர். அவர்களை அங்குள்ள ஜோலோ தீவுக்கு கொண்டு சென்று பிணைக்கைதிகளாக அடைத்து வைத்தனர்.

அந்தப் பெண்ணை விடுதலை செய்வதற்கு பெருந்தொகையை தீவிரவாதிகள் வசம் கொடுத்ததாகவும், அதன் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பிணைக்கைதியாக இருந்த மலேசிய தொழில் அதிபர் பெர்னார்டை அபு சய்யாப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் கூறுகிறது.

மலேசிய தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டிருப்பதை, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பெர்னார்டு கொல்லப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளேன். சதிகாரர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்…!!
Next post அரபு இனத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: வீடியோ பதிவு வெளியிட்டதால் பரபரப்பு…!!