நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு…!!
Read Time:1 Minute, 8 Second
நடிகர் சங்கம் தொடுத்த அவதூறு வழக்கில், நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் வடிவேலு, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தைக் காணவில்லை என்று பேசினார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தென்னிந்திய நடிகர் சங்கச் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத் தலைவருமான ஆட்டோ ராஜா, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வடிவேலுவின் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27ம் திகதி நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Average Rating