கோடம்பாக்கத்தில் விபசாரம் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு, 2 புரோக்கர்கள் கைது

Read Time:1 Minute, 39 Second

ani_kissingcousins6cp.gifவிபசார தடுப்பு பிரிவு போலீசார், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த விபசார புரோக்கர் சாய்ராம் (எ) ஈஸ்வர், இந்த வீட்டில் 2 பெண்கள் உள்ளனர். நீங்கள் விரும்பினால், தேவையான பெண்களை தேர்வு செய்யலாம் என்றார். அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். விபசார புரோக்கர் குமாரி (43) கைது செய்யப்பட்டார். மேலும், ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யமணி (20), குண்டூரைச் சேர்ந்த அனிதா (21) ஆகியோர் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஸ்கூட்டர், செல்போன், ரூ.16 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், தமிழ் திரைப்படங்களை தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யும் பணியை, சாய்ராம் செய்து வந்ததாகவும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சாய்ராம், குமாரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 பெண்களும், மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகை கணவர் முன்ஜாமீன் மனு
Next post இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்: கைதிகளின் நலனில் அக்கறை