நாகதீபவின் பெயர் மாற்றப்பட வேண்டியதில்லை – சம்பந்தன்…!!
Read Time:58 Second
யாழ்ப்பாணம் – நாகதீப வின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாகதீப தீவின் பெயரை, அதன் புராதன பெயரான நைனாதீவு என்றே மாற்றப்பட வேண்டும் என்று அண்மையில் வடமாகாண சபையில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தென்னிலங்;கையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
எவ்வாறாயினும், நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விதமாக, அந்த பெயர் அவ்வாறே நீடிப்பதில் சிக்கல் இல்லை என்று, இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
Average Rating