ஆப்கான், பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் உணரப்பட்டது…!!
Read Time:1 Minute, 10 Second
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. காபூலில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்காஸாம் அருகில் 90 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 11.46 மணியளிவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பூகம்பம் ஆப்கானிஸ்தானின் பல இடங்களிலும், பாகிஸ்தானின் பெஷாவர், காபூல், இஸ்லாமாபாத், லாகூரிலும் ஏற்பட்டது. இந்தியாவில், டில்லி மற்றும் காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Average Rating