திருமணம் செய்தவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: என்ஜினீயர் கைது…!!

Read Time:3 Minute, 38 Second

cfdeb478-c47e-4a8a-8d0a-64db38fee119_S_secvpfசென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் தண்டாயுதபாணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரி. கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா(24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சித்ராவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திக் மதுரைக்கு அழைத்து வந்தார். மதுரையில் கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள்.

அப்போது ஆசை வார்த்தை கூறி சித்ராவை கார்த்திக் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதன்பின் ஏற்கனவே உறுதி அளித்தது போல் சித்ராவை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காதலர்கள் இருவரும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறி தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு சித்ரா தெரிவித்துள்ளார்.

இதை நம்பி கார்த்திக்கும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் நடந்த சம்பவத்தை சித்ரா கூறியுள்ளார். காதலரான கார்த்திக் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதையும் தெரிவித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

அப்போது தான் வயிறு வலிப்பதாக கூறி சித்ரா தந்திரமாக தப்பி வந்தது கார்த்திக்குக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

காதலர்கள் இருவரும் தங்கி இருந்த ஓட்டல் எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்துக்குட்பட்டது என்பதால் சம்பந்தபட்ட போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து கார்த்திக், சித்ரா ஆகியோரது பெற்றோருக்கு தெரிவித்து அவர்களை போலீசார் மதுரைக்கு வரவழைத்தனர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதலில் சித்ராவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த கார்த்திக், பின்னர் மறுத்துவிட்டார். இதனையடுத்து திருமண ஆசை காட்டி கடத்தி வந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை…!!
Next post புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி ஆஜராகவில்லை.. ஏன்? (படங்கள் & வீடியோ)