89 வயது எஜமானி பாலியல் துஷ்பிரயோகம் வீட்டு பணிப்பெண்ணின் கணவர் கைது..!!
Read Time:1 Minute, 21 Second
பண்டாரகம பிரதேசத்தில் 89 வயதான வயோதிப பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால் அப்பெண்ணின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் பெண்ணின் கணவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட வயோதிபப் பெண் பணிப்பெண்ணுக்கு அவரது வீட்டுக்கு பின்னாலுள்ள காணியில் குடியிருக்க இடமளித்துள்ளார்.
பணிப்பெண்ணின் 41 வயது கணவரும் அக்காணியில் வசித்து வந்துள்ளார். வயோதிபப் பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வயோதிபப் பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating