பனிப்பாறையில் மோதி சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது; 150 பேர் உயிர் தப்பினர்
Read Time:59 Second
லைபீரிய நாட்டைச் சேர்ந்த `எக்ஸ்பிளாரர்’ என்ற சொகுசு கப்பல், அண்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 100 உல்லாச பயணிகளும், 54 சிப்பந்திகளும் இருந்தனர். தெற்கு ஷெட்லண்ட் தீவு அருகே சென்றபோது, திடீரென பனிப்பாறை மீது அந்த கப்பல் மோதியது. இதையடுத்து கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் மூழ்க தொடங்கியது. பதறிப்போன பயணிகள், கப்பலில் இருந்த உயிர் காக்கும் படகுகளை பயன்படுத்தி உயிர் தப்பினர். பின்னர் அவர்களை இங்கிலாந்து கடற்படையினர் `எண்டீவர்’ என்ற கப்பல் மூலமாக பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் 154 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.