துருக்கி அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 39 Second

98d1f456-4063-4df2-9a07-6d44dddb38eb_S_secvpfஉள்நாட்டு போர் நிலவி வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்கள் ரப்பர் மற்றும் மர படகுகளில் பயணம் செய்து துருக்கி வழியாக கிரீஸ் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு மேற்கொள்ளும் பாதுகாப்பற்ற பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவை சேர்ந்த 55 அகதிகள் படகு ஒன்றில் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவை நோக்கி புறப்பட்டனர். இந்த படகு துருக்கியின் அய்வாசிக் நகர் அருகே சென்ற போது கடலில் மூழ்கியது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

அதேபோல் 20 அகதிகளை ஏற்றிக்கொண்டு துருக்கியில் இருந்து கோஸ் தீவை நோக்கி புறப்பட்ட மற்றொரு படகும் கடலில் மூழ்கியது. இதில் 4 வயது மற்றும் 1 வயதான அக்காள்–தங்கை இருவர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் என்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட காட்டு முயல் தந்திரமாக மீட்பு: வைரல் வீடியோ…!!
Next post ஆழ்வார்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு…!!