சவுதி அரேபிய பணிப்பெண்ணின் சடலம்…!!
Read Time:1 Minute, 13 Second
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் உயிரிழந்த வவுனியா – சிதம்பரம்புரத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது சடலத்தை அவரின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
29 வயதான, இரண்டு பிள்ளைகளின் தயான அவர், கடந்த மே மாதம் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் பணியாற்றிவந்த வீட்டில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
எனினும் அவர் சவுதியில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பெண்ணின் மரணம் குறித்து சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணைகளை நடத்துவதாக எமது செய்திப்பிரிவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating