தெற்கின் தாக்குதல்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான கட்சி ஒத்துழைப்பு. -லெப்டினன்ட் ஜெனரல். சரத் பொன்சேகா!!
அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களே புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி யால மற்றும் திஸ்ஸ மஹாராம பகுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல். சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யால, திஸ்ஸமஹாராம பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த வெடிகுண்டுத் தாக்குதல், படுகொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். யால காட்டுக்குள் சிறுசிறு கும்பல்களாக உலாவித்திரியும் புலிகளுக்கு இந்த அரசியல் கட்சியினரே ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, யால, மற்றும் திஸ்ஸ மஹாராம பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.