மதம் பிடித்த தனியார் யானை 20 கி.மீ., ஓடியதால் பரபரப்பு
மதம் பிடித்த தனியார் யானை, சங்கிலியை அறுத்துக் கொண்டு சாலையில் 20 கிலோமீட்டர் துõரத்துக்கு ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியே கதிகலங்கிப் போனது. கேரளா மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் சொந்தமாக யானை வளர்த்து வந்தார். அதற்கு கணபதி என்று பெயர். ஞாயிறன்று மாலை திடீர் என மதம் பிடித்தது. சங்கிலியை அறுத்துக் கொண்டு யானை ஓட்டம் பிடித்தது. மல்லப்பள்ளியில் நெரிசல் மிகுந்த பகுதியில் மதம் பிடித்த யானை ஓடியதால், பொதுமக்கள் பீதியில் சிதறி ஓடினர். சத்தம் போட்டு யானையை அடக்க பாகன்கள் முயன்றனர். அது பயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டே 20 கி.மீ., துõரத்துக்கு ஓடியது. இரவு 7.30 மணியளவில் வெள்ளாவூர் அருகே ரப்பர் தோட்டத்தில் புகுந்து நின்றது. பின்னாலேயே ஓடிய பாகன்கள் அதை தண்ணீர் ஊற்றி குளிரச் செய்தனர். சங்கிலியில் கட்டி அழைத்துச் சென்றனர். யானைக்கு மதம் பிடித்து ஓடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.