நாளை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: பி.பி.சி. எச்சரிக்கை..!!
Read Time:1 Minute, 19 Second
தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இங்கிலாந்தின் பிரபல செய்தி நிறுவனமான பி.பி.சி. எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
சென்னைக்குட்பட்ட சில பகுதிகளில் அவ்வப்போது லேசாக மழை பெய்யும். கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Average Rating