இங்கிலாந்தில் மென்சா கிளப்பில் இந்திய சிறுவன்…!!
Read Time:1 Minute, 24 Second
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவன் வெங்கட சத்ய ஸ்ரீ ரோகன் சிக்காம். இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். அங்குள்ள பள்ளியில் 8–வது வகுப்பு படிக்கிறான். சமீபத்தில் அங்கு நடந்த அறிவு திறன் போட்டியில் 162–க்கு 161 மதிப்பெணகள் பெற்றான்.
இதன் மூலம் அவன் லண்டனில் அறிவாளிகளின் ‘மென்சா கிளப்’பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டிருக்கிறான். இவனது தந்தை விஷ்ணு சிக்காம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இங்கிலாந்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். இவரது குடும்பம் கடந்த 8 ஆண்டுகளாக அங்கு தங்கியுள்ளனர்.
ரோகன் தொடக்க பள்ளியில் இருந்தே கணித பாடத்தில் அறிவாற்றல் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த கணித தேர்வு போட்டியில் தங்க பத்திரம் வென்றான். தற்போது தனது மகன் ‘மென்சா கிளப்’பில் உறுப்பினராகி இருப்பது பெருமை அளிப்பதாக தந்தை விஷ்ணு சிக்காம் பெருமிதத்துடன் கூறினார்.
Average Rating