வாலிபர்களிடம் வெடிபொருட்கள்
சிதம்பரத்தில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொள்ளிடத்திற்கு முன்பாக வல்லம் படுகை போலீஸ் செக்போஸ்ட் வழியாக தஞ்சாவூரைச் சேர்ந்த முத்துகுமார் (வயது 22), ராஜா (வயது 32) ஆகியோர் கையில் பையுடன் சென்றுக் கொண்டிருந்தினர். அப்போது செக்போஸ்ட்டில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து இருவரிடம் விசாரணை நடத்தி பையை சோதனையிட்டனர். அந்த பையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 40க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இருவரும் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 68 ஜெலட்டின் குச்சிகளும், 121 டெட்டனேட்டர்களும் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததோடு இருவரையும் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இருவரும் ரெயில்வே பாதைக்காக பழைய பாலங்களை இடிக்கும் பணிக்கு தாங்கள் எடுத்து சென்றதாக கூறினர். ஆனால், அதற்கான அனுமதி அவர்களிடம் இல்லாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறன்றனர். வெடிப்பொருட்களுடன் இருவர் பிடிபட்டிருப்பது சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.