நண்பருடன் ஓடிய மனைவியை கணவர் ஏற்க மறுப்பு: கள்ளக் காதலன் தலைமறைவு

Read Time:2 Minute, 10 Second

ani_kiss.gifநண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். திருநெல்வேலி பத்தமடையைச் சேரேந்த தங்கபாண்டியும் ரமேசும் நண்பர்கள். இதனால் ரமேஷ் அடிக்கடி தங்கபாண்டி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தங்கபாண்டி மனைவி கல்பனாவுடன் ரமேசுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தங்கப்பாண்டி இல்லாத நேரத்தில் கல்பனாவுடன் ரமேஷ் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கல்பனா கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ரமேசுடன் ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசில் தங்கபாண்டி புகார் செய்தார். இந் நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கல்பனாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவருடன் இருந்த ரமேஷ் தலைமறைவாகி விட்டார். பத்தமடைக்கு அழைத்து வரப்பட்ட கல்பனாவை விசாரணைக்கு பின்னர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திற்கு வந்திருந்த கல்பனாவின் கணவர் தங்கபாண்டி தன்னுடன் மனைவியை அழைத்து செல்ல மறுத்துவிட்டார். இதனால் கணவனாலும், கள்ளக் காதலனாலும் கைவிடப்பட்ட கல்பனாவை மதுரையில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கும்படி நீதிபதி ரவி உத்தரவிட்டார். கல்பனாவை அழைத்து சென்ற ரமேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘சாக்லேட்டுக்கு’ பெண்-‘ஸ்னாக்ஸுக்கு’ ஆண்!!
Next post கணவர் குடும்பத்தாரை தூக்கில் போட வேண்டும்-ஜெனிதா