மேற்கு வங்காள அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்…!!
மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், மருத்துவ கண்காணிப்பாளருமான அமித் டான் கூறியதாவது:-
நேற்று இறந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பிறக்கும் போதே எடைகுறைவாக காணப்பட்டது. குழந்தையின் எடை வெறும் 960 கிராம் மட்டுமே இருந்தது. மேலும் 2 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டன.
குழந்தைகள் தொடர்ந்து பலியாவது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating