சோமாலியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 3 பேர் பலி…!!
Read Time:51 Second
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மக்கா அல் முகாமரமா தெருவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அல்–கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்–ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவின் கல்காதூத் மாகாண கவர்னர் உசேன் வெக்லியி இர்போவை குறி வைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், அவரது வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியதால் அவர் உயிர் பிழைத்தார்.
Average Rating