சவுதியில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பல்…!!
Read Time:1 Minute, 4 Second
சவுதி அரேபியாவில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பியுள்ளார்.
புத்தளம் மதுரங்குள் பகுதியை சேரந்த 30 வயதாக பெண்னொருவரே நாடு திரும்பியுள்ளார்.
நாடுதிரும்பிய குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கணவனை பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழும் குறித்த பெண் குடும்ப வறுமை காரணமாக இரண்டாவது தடவையாகவும் சவுதிக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சவுதி எஜமானால் பல்வேறு இன்னல்களுக்கு தாம் முகங்கொடுத்ததாகவும் இதன் காரணமாக ஆணிகளை விழுங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
Average Rating