விமானத் தாக்குதல் தொடரும் – பிரதமர்..!
Read Time:1 Minute, 20 Second
பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்கும் வரை எக்காரணம் கொண்டும் விமானத் தாக்குதல்கள் தொடரும் என பிரமர் நாடாளுமனறத்தில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ரெலோ இயக்க நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் முன் வைத்த பிரேரணைக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு பிரதமர் தெரிவித்தார். பிரபாகரன் என்ற நபர் தோல்வி என்ற பாதாளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தறுவாயிலேயே விமானக் குணடுவீச்சுக்களை நிறுத்தக் கோருகிறார்கள். விமானக்குண்டு வீச்சுக்களை நிறுத்தினால் விளிம்பிலிருக்கும் பிரபாகரனைக் காப்பாற்றிதாக அமைந்து விடும் எனவே எக்காரணம் கொண்டும் விமானக்குண்டு வீச்சுக்களையோ, தாக்குதல்களையே நிறுத்த முடியாது என்பதை வருத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.