யாழ் – வரணிப் பகுதியில் வயலில் வீழ்ந்து விவசாயி உயிரிழப்பு..!!

Read Time:1 Minute, 25 Second

downloadவெள்ளத்தால் வயல் அழிவடைந்தததை அதிகாரிகளுக்கு காட்டியவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று வரணிப் பகுதியில் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

வரணி தாளையடியைச் சேர்ந்த சின்னையா குஞ்சுத்தம்பி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெய்த அடை மழையால் அழிவடைந்த வயல் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் பொருட்டு அதனை ஆய்வு செய்யும் நடவடிக்கையை மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில் வரணிப் பகுதியில் அழிவடைந்த வயல் நிலங்களை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற அதிகாரிகளுக்கு தனது வயல் அழிவடைந்ததை காட்டிவிட்டு வீடு திரும்ப முற்பட்ட குறித்த வயோதிபர் வரம்பிலிருந்து தவறி வயலுக்குள் வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதுஅவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது…!!
Next post யாழ் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் மூவர் படுகாயம்..!!