கொத்து ரொட்டி சுவாசப்பாதையில் சிக்கி உயிரிழந்த 19 வயது மாணவன்..!!
கொத்து ரொட்டி உட்கொண்ட சந்தர்ப்பத்தில் அது சுவாசப் பாதையில் சிக்குண்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவன் உட்கொண்ட உணவின் ஒவ்வாமையின் காரணமாக மரண இடம்பெற்றதாக ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிட்டிருந்த போதிலும் மரண பரிசோதனைகளின் போது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவென கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வாமை காரணமாக குறித்த மரணம் இடம்பெறவில்லை என்றும் சுவாசப் பாதையில் உணவு சிக்குண்டமையே மரணத்துக்கான காரணம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 19 வயதுடைய மாணவன் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது நண்பரொருவருடன் உணவு உட்கொண்டதாகவும் அதன் பின்னர் நித்திரைக்கு சென்றிருந்த நிலையில் நித்திரையின் போது மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating