விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Read Time:54 Second
சிவகாசி படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தி சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம் ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீல் செல்லபாண்டியன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் விஜய் தரப்பில், வக்கீல்கள் ராஜ்மோகன், சரவணன் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 31ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.