தனது நத்தார் பரிசுப்பொருட்களை சிரிய அகதிகளுக்கு விநியோகிக்குமாறு நத்தார் தாத்தாவிடம் கோரிய சிறுவன்…!!
பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனொருவன், தனக்கு கிடைத்த நத்தார் பரிசுப் பொருட்கள் அனைத்தையும் சிரியாவைச் சேர்ந்த அகதிச் சிறார்களுக்கு வழங்குமாறு நத்தார் தாத்தாவிடம் கோரியுள்ளான்.
5 வயதான ஃபின்லே நீமன்ட் எனும் சிறுவனே இவ்வாறு தாராள சிந்தனையுடன் தனது பரிசுப்பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளான்.
இதற்காக நத்தார் தாத்தாவுக்கு கடிதமொன்றை எழு திய ஃபின்லே நீமன்ட், தயவுசெய்து எனது பரிசுப் பொருட்களை சிரியாவைச் சேர்ந்த எதுவுமற்ற ஒரு சிறுவனுக்கு உங்களால் வழங்க முடியுமா?” எனக் கேட்டுள்ளான்.
ஃபின்லே நீமன்ட்டுக்கு அவனின் பெற்றோர் வழங்கிய நத்தார் பரிசுப் பொருட் கள் கிரேக்க தீவான லெஸ் போஸிலுள்ள அகதிகளுக்கான மீட்பு நிலையமொன்றுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் அச்சிறுவனின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஃபின்லே குறித்து தான் மிகவும் பெருமடையவதாக அவனின் தாயான கிம் தெரிவித்துள்ளார். ஃபின் லேயின் கடிதத்தை தனது கணவரிடம் தான் காண் பித்தபோது தனது கண்கள் கலங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating