விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது…!!
தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பஸ் மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீட் டென்னோலொஜிஸ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் இத்தொழில்நுட்பத்தின்படி, விமானத்தின் கூரை மீது கூண்டொன்று அமைக்கப்டும். இந்த கூண்டை சுற்றி பாதுகாப்பான மற்றும் உறுதியான கண்ணாடி சுவர்கள் எழுப்பப்படும்.
இந்த கூண்டிற்கு செல்வதற்கு விமானத்திற்குள்ளே இருந்து தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதியும் உள்ளன.
விமானத்திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டால், அந்த இருக்கைகள் மேலே தூக்கி செல்லப்பட்டு கூரை மீதுள்ள கண்ணாடி கூண்டிற்குள் நிலை நிறுத்தப்படும்.
பின்னர், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், சோர்வு ஏற்படாமல் சுமார் 360 பாகை சுற்றளவு வரை சுற்றி பார்த்துக்கொண்டு பயணம் செய்யலாம்.
இதுபோன்ற வசதியினை எந்தவிதமான நவீன விமானத்திலும் பொருத்த லாம் என வின்ட்ஸ்பீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியினை விமானத்தில் பொருத்துவதற்கு 8 முதல் 25 மில்லியன் டொலர் (சுமார் 112 கோடி முதல் 350 கோடி ரூபா) வரை செலவாகும்.
“தொலை தூர விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்கவே இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த நவீன வசதியை தற்போது காப்புரிமை மட்டுமே செய்து நிலையில், இது விரைவில் நவீன விமானங்களில் பொருத்தப்பட உள்ளது’ என இது குறித்து வின்ட்ஸ்பீட் டெக்னோலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Average Rating