இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல்!! தீவிரவாத பெண் வெடித்து சிதறும் காட்சி;டெலிவிஷனில் ஒளிபரப்பு! (வீடியோ பதிவு)

Read Time:2 Minute, 20 Second

சொழும்பு நகரில் உள்ள இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன், வவுனியா நகரைச்சேர்ந்த சுஜாதா(24) என்ற பெண் சென்றாள். தன்னை ஊனமுற்றவள் என்றும், மந்திரியை பார்த்து உதவி கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவரை, போலீஸ் சோதனைக்கு பிறகே, மந்திரியை பார்க்க அனுமதிக்க முடியும் என்று, மந்திரியின் நேர்முக உதவியாளர் ஸ்டீவன் பெரீஸ் கூறிவிட்டார். போலீசார் தன்னை சோதனை போடும் போது, தன்னிடம் வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்து, பெரீஸ் தன் அருகே நின்ற போது, வெடிகுண்டை வெடிக்க செய்து விட்டாள். இதில் அவர்கள் 2 பேரும் உடல் சிதறி செத்தனர். இந்த காட்சி, அந்த அறையில் ரகசியமாக இயங்கி வந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ காட்சியை, நேற்று இலங்கை போலீசார் வெளியிட்டனர். அதில், அந்த பெண் நாற்காலியில் இருந்து எழுந்து, தனது தோள் பகுதியில் கை வைத்து அழுத்துவது போன்றும் பெரீசும், தீவிரவாத பெண்ணும் வெடித்து சிதறும் காட்சி, வீடியோவில் தெளிவாக தெரிந்தது. இதை டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பின. அது நேரடி காட்சி, மிகவும் பயங்கரமாக இருந்தது.
ஈபிடிபி செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல் அகோர நிகழ்ச்சியின் வீடியோ பதிவை முழமையாகப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்!! defence.lk/videos/20071130_EPDP.wmv

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு
Next post வார்ன் உலக சாதனை சமன் செய்தார் முரளிதரன்