சீன நிலச்சரிவு: பதைபதைக்க வைக்கும் பறவைக் கோண புகைப்படங்கள்…!!

Read Time:2 Minute, 41 Second

8e5da4a7-7202-4ab7-a074-038f8cdab85f_S_secvpfசீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட மண், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 100 மீட்டர் உயரத்துக்கு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு சீனாவின் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்கி பணிபுரிகின்றன. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பெய்த பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், தொழிற்பேட்டையில் உள்ள 33 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி மண்ணுக்குள் புதைந்தன. இதில் 25 பெண்கள் உள்பட 76 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 60 மணி நேரத்துக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணுக்குள் புதையுண்ட மேலும் 3 பேரின் சடலங்கள் அண்மையில் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நிலச்சரிவின் போது மிக உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட (aerial view) புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் நிலச்சரிவின் தீவிரத்தை உணர்த்தி மனதை பதைபதைக்கச் செய்கிறது.

முழுமையான புகைப்படத் தொகுப்பைக் காண கிளிக் செய்யவும் https://www.facebook.com/Maalaimalartamil/

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நத்தார் மரத்தின் சாயலில் ஆடையணிந்த பாடகி பியோன்ஸே…!!
Next post பனிமலையில் இருந்து இறங்கிய ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலி…!!