கர்ப்பிணி மீது லொரியை மோதிய சாரதி விளக்கமறிலில்…!!
கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்ட பகுதியில் லொரி ஒன்று பாதையின் குறுக்கே சென்ற பெண் மீது மோதியதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இதேவேளை அங்கு கூடிய பொதுமக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவர் கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் கொத்மலை பொலிசாரினால் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு நாவலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஜாஎல கடான பகுதியை சேர்ந்தவராவார். வாடகைக்காக லொரி ஒன்றின் மூலம் நுவரெலியா வந்துள்ளார். நுவரெலியாவிலும் இவர் லொரியை வீடு ஒன்றின் சுவரில் மோதி அதற்காக 04 நாட்கள் பொலிஸில் இருந்து வீட்டு உரிமையாளருக்கு நஸ்ட்ட ஈட்டை வழங்கியதன் பின் கடானைக்கு திரும்பியுள்ளார். அச் சந்தர்பத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 வயது சிறுவனின் தாயான 34 வயதான பெண் ஒருவரே பலியாகியுள்ளார்.
மேலும் இவர் கர்பிணி எனவும் தெரியவந்துள்ளது. சடலத்தை உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Average Rating