88 வயதான தாயைத் தவிக்கவிட்ட 8 பிள்ளைகளுக்கு வலைவீச்சு…!!
Read Time:1 Minute, 14 Second
88 வயதான தாயை, சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்ட எட்டுப்பிள்ளைகளையும் தேடி பொலிஸார், வலை விரித்துள்ளனர்.
குறித்த தாய், வறக்காபொல, உடபாகே பிரதேசத்தில் சிறிய மண்குடிசையில் தன்னந்தனியாக இருந்போது, வறக்காபொல பொலிஸார், 28 ஆம் திகதியன்று மீட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர சேவைப்பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்தே, அத்தாயை தாம் மீட்டுள்ளதாகவும், அத்தாய் பல நாட்களாக சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரினால் காப்பாற்றப்பட்ட அந்தத் தாய், வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், வயோதிபத் தாயைக் கைவிட்டுச்சென்ற பிள்ளைகள் எட்டுப்பேரையும் தேடி வலைவிரித்துள்ளதாகவும் அறிவித்தனர்.
Average Rating