ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 12 பயிற்சி போலீசார் பலி..!!

Read Time:1 Minute, 22 Second

21642146-1697-4282-9a80-fdaf22ad2f55_S_secvpfஈராக்கில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

மோசூல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள நினெவெஹ்-வை சேர்ந்த பாதுகாப்பு படையினர் ஸ்பெய்ச்சர் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். திக்ரிட் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நினெவெ போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் தீவிரவாதிகளில் 3 பேர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 12 போலீசார் கொல்லப்பட்டனர். அதில் 3 பேர் உயர் அதிகாரிகள். நடு இரவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 20 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல கார்களை தவிடுபொடியாக்கிவிட்டு சாலையில் சரிந்த ராட்சத லாரி: திகில் வீடியோ…!!
Next post கடலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!!