புத்தளத்தில் அதி சொகுசு சிற்றூர்தியில் தீ விபத்து…!!
Read Time:1 Minute, 15 Second
புத்தளம் – முந்தலமல – மதுரங்குலி உள்ள செம்பெட்ட பிரதேசத்தில் இன்று (4) அதிகாலை வீடொன்றில் இருந்த அதி சொகுசு சிற்றூர்தி முழுமையாக தீப்பிடித்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பிடித்த குறித்த வாகனம் நேற்றிரவு (3) அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, திடீர் என்று வாகன இயந்திரம் செயல் இழந்ததால் மதுரங்குலி, செம்பெட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிறுத்தி விட்டு, சிற்றூர்தியின் உரிமையாளர் பேரூந்தில் ஏறி கொழும்பிற்கு சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பின்னரே இந்த தீ விபத்து இடம் பெற்றதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating