இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு…!!
Read Time:1 Minute, 0 Second
தமிழகத்தின் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி ரோகினி (31). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ரோகினி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கே.கே. நகர் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating