விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார்.

Read Time:1 Minute, 1 Second

schlange.gifகாஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார். சுங்குவார்சத்திரம் அடுத்த பொதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன் (வயது 25). இவர் அங்குள்ள விறகு கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் விறகுவெட்டும் போது ராமையனை நல்லபாம்பு கடித்தது. வாயில் நுரைதள்ளிய நிலையில் கீழே சாய்ந்த ராமையனை சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவ மனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மருமகள் எரித்துக்கொலை
Next post கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள்