ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள்…!!
Read Time:1 Minute, 2 Second
பல்வேறு விடயங்கள் தொடர்பில் 1400 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளன.
கடந்த நவம்பர் மாத இறுதியில் சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பொதுமக்கள் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவடைவதாகவும் லெசில் டி சில்வா கூறினார்.
Average Rating