அரும்பாக்கத்தில் மதுகுடித்து வந்த தந்தையை அடித்து கொன்ற மகன் கைது…!!
அரும்பாக்கம், முத்து மாரியம்மன் கோவில் காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் செல்வம் (வயது 50). கொடி, தோரணம் கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ரேகா, மகன் கார்த்திகேயன்.
பன்னீர் செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
இதனை மனைவி ரேகா கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கார்த்திகேயன் தந்தை பன்னீர் செல்வத்தை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் பலமாக பன்னீர் செல்வத்தை கீழே தள்ளினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பன்னீர் செல்வத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தார். பன்னீர் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கிறது.
தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating